Wednesday, January 6, 2010

ஒரு காலையில் நீ இல்லை...



விழித்திரையில் வழிந்தோடிய காட்சி ஒன்று
நினைவு அடுக்குகளில் இருந்து
தேடி எடுத்து வைத்தேன்

அதற்கு உன் முகம் அணிவித்தேன்
உடல் பூட்டினேன்
நீ என மாற்றினேன்

மனம் உயிர் தர முறையிட்டது
நிராகரித்தேன்

இது எனக்கான உனது பிம்பம்
இதன் கடவுள் நான்
பெற்றோர் நான்
சுற்றம் நான்
காதலன் நான்
குழந்தையும் நான்

நான் நான் நான் மட்டுமே

ஒரே முறை என் முன்னால் வந்து விடு
உன்னை கட்டி அனைத்து என்னுள் அமிழ்த்தி
எனது உயிரின் வேரில் படிந்து விட்ட
உனது வாசமும் இதழின் ஈரமும்
இதற்கு ஊட்ட வேண்டும்

பின் உன் உயிர் எடுத்து என் நினைவுகளில்
தொலைத்திட வேண்டும்

ஆம்
இது எனக்கான உனது பிம்பம்
உயிர் பெற்றால் உன்னை போல் விலகி விடுவாள்

6 comments:

  1. //எனது உயிரின் வேரில் படிந்து விட்ட
    உனது வாசமும் இதழின் ஈரமும்//
    feels nice...

    ReplyDelete
  2. ////பின் உன் உயிர் எடுத்து என் நினைவுகளில்
    தொலைத்திட வேண்டும்

    ஆம்
    இது எனக்கான உனது பிம்பம்
    உயிர் பெற்றால் உன்னை போல் விலகி விடுவாள்////


    வாவ். ரொம்ப நல்லா இருக்கு. ஏன் இத்தனை இடைவெளி. ரொம்ப வேலையோ.

    ReplyDelete
  3. நன்றி kavya, S.A. நவாஸுதீன் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  4. நல்லா இருக்கு மோகன். வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. நன்றி குடந்தை அன்புமணி

    ReplyDelete
  6. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete