Monday, January 19, 2009

...

தொட்டில் கண்டதில்லை
தொட்டியில் கண்டெடுக்கபட்டோம்

பிறந்தது முதல் கண்ணீர் மட்டுமே சொந்தமாய் கொண்டோம்

மறந்து விட நினைகிறேன்
என்ன செய்வது
பள்ளி முதல் சுடுகாடு வரை உங்கள் பெயர் கேட்கிறானே

உங்கள் ஒரு நாள் நாடகத்தால்
இங்கு வாழ் நாள் முழுவதும்
முகவரி இழந்தேன்

சிந்தனை சிறகுகள்
விரிய நினைக்கையில்
அனாதை என்ற ஒற்றை சொல்லால்
சிறகொடிக்க படுகின்றோம்

ஊர் அறிய கதறினேன்
இறைவனின் குழந்தை என
உலகம் நாத்திகமாய் மாறியது அறியாமல்

இறைவனின் படைப்பு புத்தகத்தில்
முன்னுரை இல்லாமல் எழுதப்பட்ட
இலக்கியங்கள் நாங்கள்

ஏனோ
முன்னுரை இல்லாத ஓர் குறையால்
முடிவுரை இன்றி தவிக்கிறோம்

இனி ஒரு விதி செய்வோம்
முதல் எழுத்து இல்லா சமுதாயம் படைதிடுவோம்

- இரா.மோகன்

3 comments:

  1. கவிதை அனைத்தும் அருமை
    இரா.மோகன்

    ReplyDelete
  2. நன்றி நிலாவன்

    ReplyDelete
  3. Hi

    உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

    ReplyDelete