Sunday, July 12, 2009

உதிர்ந்து விழும் கருவறைகள்



தோன்றிடும் முன்னே உதிர்ந்து விட்டாயே

விரல் பிடித்து நடை பழக பொறுமை இல்லாமல்
சிறகுகள் கொண்டு பறந்து விட்டாயா

மொழி நிறம் உருவம் என்று அலையும் உலகில்
உருவம் கொள்ளாமல் சதை பிண்டமாய் மறித்து விட்டாயா

என்னுடல் பிரிய மனம் இன்றி
என்னுளே உறங்கி விட்டாயா

சொல்லடி என் தங்கமே

தொட்டு தடவி மகிழ்ந்த கைகள் இன்று
நீ இல்லா வெறுமையை வருடியபடி
நீ கலையவில்லை என்னுள் கலந்து விட்டாய்
என கூற கதறுகிறது

இது கலைதல் அல்ல மரணம்
ஒரு தாய்மையின் மரணம்