
தோன்றிடும் முன்னே உதிர்ந்து விட்டாயே
விரல் பிடித்து நடை பழக பொறுமை இல்லாமல்
சிறகுகள் கொண்டு பறந்து விட்டாயா
மொழி நிறம் உருவம் என்று அலையும் உலகில்
உருவம் கொள்ளாமல் சதை பிண்டமாய் மறித்து விட்டாயா
என்னுடல் பிரிய மனம் இன்றி
என்னுளே உறங்கி விட்டாயா
சொல்லடி என் தங்கமே
தொட்டு தடவி மகிழ்ந்த கைகள் இன்று
நீ இல்லா வெறுமையை வருடியபடி
நீ கலையவில்லை என்னுள் கலந்து விட்டாய்
என கூற கதறுகிறது
இது கலைதல் அல்ல மரணம்
ஒரு தாய்மையின் மரணம்
மனது வலித்தது
ReplyDeleteவரிகளில் பிரிவு
பிரிவு வலித்தது
ReplyDelete:-(
இந்த துயரம் அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும்...
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்திருக்கிறீர்கள். இப்படி ஒரு கலங்க வைக்கும் கவிதையும் எழுதுகிறீர்கள். என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ReplyDeleteஎன் பட்டாம் பூச்சி உங்கள் வலயத்தில் பறகடிப்பது மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது.
இது என்னை நானாய் ஏற்று கொண்ட எனது தோழிக்கு சமர்ப்பணம்... எனது மற்றும் உங்கள் அன்பும் பிரார்த்தனையும் அவளுக்கு துணை இருக்கட்டும்...
ReplyDeleteஇதை படித்தால், கருவைக் கலைக்க நினைப்பவள் கூட கதறி அழுவாள் செய்யவிருந்த கொலையை எண்ணி. கடைசி வரியில் மொத்த வலியும் தெரிகிறது
ReplyDeleteவலிகள் வரிகள் ...
ReplyDeletehai ivan ungaluku en bloglaour avord koduthu iurken parunga pa
ReplyDeleteநல்லா இருக்குங்க கவிதை
ReplyDeleteமறித்து விட்டாயா
மரித்து விட்டாயன்னு இருக்கணுமோ?
awesome... varthaikalal koli seivathu ethu thaano..?????
ReplyDelete