Tuesday, December 1, 2009

ஒரு தெய்வம் தந்த பூவே...


குழந்தையின் சிரிப்பில் மட்டுமே
தோற்று போகிறேன்

விடிந்தது முதல்
சுமந்து கொண்டு திரிகிறேன்
அனைவருக்குமான முகமுடிகளை

கோவம் தெறித்த படி ஒன்று
காதல் பொழிந்த படி ஒன்று
கண்ணீரோடு ஒன்று
வெறுப்பு உமிழ்ந்த படி ஒன்று
மௌனம் சுமந்து ஒன்று

இப்படி சில இருந்தாலும்

அநேகம் சிரிப்பினை சுமந்த படியே...

தெருவில் எதிர்படும்
முகம் தெரியாதவைக்கு என்று சில

அலுவலக சகாக்களுக்கு என்று சில

புண்படுத்திய மனங்களை
மன்னிபதற்கு என்று சில

புண் பட்ட மனங்களுக்கு
ஆறுதலாய் சில

என

அநேகம் சிரிப்பினை சுமந்த படியே...

கொஞ்ச காலமாய்
குழந்தையின் சிரிப்பில் மட்டுமே
முகமுடிகள் தேடி தோற்று போகிறேன்

Monday, November 23, 2009

என் கவிதை எனபடுவது யாதெனில்...

உறக்கம் களைந்த ஒரு பின்னிரவில்
என் வெறுமையினை பங்கிட்ட வேளையில்
உன்னை என் கனவுகள் என்றேன்

ஆம் என்றாய்

அவளின் மேல் கொண்ட காதலில்
பின் அவள் பரிசளித்த பிரிவிலும்
உன்னை என் காதலி என்றேன்

ஆம் என்றாய்

தெளிந்த நீரோடையாய் மனம்
தெளிந்து அடங்கிய பொழுதுகளில்
உன்னை என் கவிதை என்றேன்

ஆம் என்றாய்

தொடக்கத்தின் முதல் படியில் முடிந்து விடும்
அர்த்தமற்ற உறவுகள் தரும் நினைவுகளில்
நீ எனது சிறு புன்னகை என்றேன்

ஆம் என்றாய்

இனி தோழியினை நீ என்பதா நீங்கள் என்பதா
என்ற கெட்டி மேளத்தையும் தாண்டிய பட்டி மன்றத்தில்
உன்னை என் தோழி என்றேன்

ஆம் என்றாய்

எண்ணங்களின் முரண்களில் சிக்கி
சிதறிய வார்த்தைகளை கோர்த்த பொழுதுகளில்
உன்னை கிறுக்கல் என்றேன்

ஆம் என்றாய்

ஓயாமல் கதறும் தனிமையினில் இருந்து
என்னை மீட்டு எடுத்த நேரங்களில்
உன்னை தேவதை என்றேன்

ஆம் என்றாய்

மன சலனங்கள் அடங்கிய வேளையில்
மௌனங்களோடு உரையாட தொடங்கிய பொழுதுகளில்
உன்னை என் மன கண்ணாடி என்றேன்

மௌனமாய் சிரித்தாய்

Monday, November 9, 2009

டிசம்பர் பூக்கள்


டிசம்பர் பூக்கள்

தினமும் மாலை
பூ விற்கும் பெண்ணிடம்
வாங்கி விடுவேன்

நான் தரும் ஐந்து ரூபாய்க்கு
சின்னதாய் மல்லிகை சரமும் சேர்த்து தருவாள்
நாசி தீண்டும் வியர்வையின் சொந்தகாரி

அன்றைய ஆத்திகனாகிய நான்
மல்லிகையினை சாமிக்கு இட்டேன்

இன்று குளிர் பெட்டியிலும்
நாளையின் காலையில்
உனது இயற்கை செயற்கை
கூந்தல் நடுவிலும்
பூத்து இருப்பாள்

பின் ஒரு நாள்
என்னவள் என நான் நினைத்த
அவள் கூந்தலிலும்
பூத்து இருந்ததாய் ஞாபகம்

இருந்தும் எனக்கு
ஏனோ என்றும் அவள்
உனது நரை முடி
டிசம்பர் ஆகவே தெரிந்து வந்தாள்

இரண்டு வருடமாய்
இந்த வெள்ளை தேசத்தில்
மலர் குவியல்களிலும்
மங்கையரின் மயிர் குவியல்களிலும்
ஏனோ அவள் தென்படவே இல்லை

இந்த வருட விடுமுறையில்
மீண்டும் ஒரு நாள்
உன்னை நரை முடி கிழவியின்
கூந்தலில் சிறை பிடிக்க வேண்டி
ஐந்து ரூபாய் தேடி எடுத்து வைத்தேன்

அந்த சிறிய மல்லிகை சரம்
இன்றும் தருவாளோ அந்த
நாசி தீண்டும் வியர்வையின் சொந்தகாரி

Monday, October 26, 2009

உனது அலைகள் எனை அடிக்க கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட...






அலைகளோடு அழகாய்
யுத்தம் செய்கிறாய்
ஜெயித்தது என்னவோ
உன் கால்கள் தான்
தோற்றது நானடி...

Thursday, August 6, 2009

யாரும் அறியாமல்
மனதின் அடர்ந்த மூலையில்
சேர்த்து வருகிறான்
அனைவருக்குமான சொற்களை

சிறகடிக்கும் பட்டாம்பூச்சியில்
மனதை சிதறடித்தபடி
மெல்லிசை அருந்தி
நினைவுகளில் தொலைந்திருந்தான்
நீ எதிர்படும் வரை

உனக்கான சொற்களை
அனைவருகுமானதில் இருந்து பிரித்தெடுத்து
உனக்கான முகமுடியை அணிந்து
இதழ் ஓரத்தில் காத்திருந்தான்
சந்தர்பங்கள் எதிர்நோக்கி

அமைந்திடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
தவறாமல் எடுதெரிந்தான்...
உடைந்து உருகியது
உன்னுள் இருக்கும் நானாகிய பிம்பமும்
என்னுள் இருக்கும் நீயாகிய பிம்பமும்

திரும்பி நடந்தேன்.
உடல் நீங்கிய நிழலாய் தொலைந்து அலைந்தன...
நமக்குள் நமக்கென இருந்த நேசங்கள்

நம் இதழ் ஓரத்தில் சிரித்தன
இரண்டு மன சாத்தான்கள்

Sunday, July 12, 2009

உதிர்ந்து விழும் கருவறைகள்



தோன்றிடும் முன்னே உதிர்ந்து விட்டாயே

விரல் பிடித்து நடை பழக பொறுமை இல்லாமல்
சிறகுகள் கொண்டு பறந்து விட்டாயா

மொழி நிறம் உருவம் என்று அலையும் உலகில்
உருவம் கொள்ளாமல் சதை பிண்டமாய் மறித்து விட்டாயா

என்னுடல் பிரிய மனம் இன்றி
என்னுளே உறங்கி விட்டாயா

சொல்லடி என் தங்கமே

தொட்டு தடவி மகிழ்ந்த கைகள் இன்று
நீ இல்லா வெறுமையை வருடியபடி
நீ கலையவில்லை என்னுள் கலந்து விட்டாய்
என கூற கதறுகிறது

இது கலைதல் அல்ல மரணம்
ஒரு தாய்மையின் மரணம்

Tuesday, May 12, 2009

தொலைந்து விட்ட மறதியும், சில நினைவுகளும்



வெகு வேகமாய் ஓடி கொண்டு இருக்குறான்
கால அரக்கன்
மழை துளி போல் மணி துளிகள் சிதறியபடி

சிதறி விழும் ஒவ்வொரு துளியும்
நினைவுகள் கொண்டு நிரப்ப படுகிறது

உருகி வழியும் நிகழ் காலம்
கடந்த காலத்தின் நினைவு துளிகளால்
நனைந்து வழிகிறது

மரணிக்கும் ஒவ்வொரு நொடியும்
உயிர் விடும் ஒவ்வொரு புன்னகையும்
கால அரக்கனின் கண்ணாடி பேழையில்
நினைவு துளிகளாய் புதைக்க படுகிறது

பனி துளி மேல் படர்ந்திடும்
சூரிய கதிரின் கொடூரத்தோடு
எதிர்காலம் நினைவு துளிகளை சேகரித்து சிரிக்கிறது

கால அரக்கனின் நினைவு சிறகுகளில்
சிறைப்படும் இந்த வாழ்கையில்
மறதி மட்டுமே வரம்...

Sunday, May 3, 2009

:( shOULdeR tO crY oN :(




கண்ணீருக்கு பஞ்சம் இல்லை
தோள்களுக்கு மட்டுமே...

Wednesday, April 1, 2009

கனவுகள் தீர்ந்து போனால்......



உன் முகம் அணியாத காரணத்தால்
கலை இழந்தன கனவுகள்...

Sunday, March 29, 2009


பிரிவு
Keep in touch ஒவ்வொரு பிரிதலின் தொடக்கமும் இப்படி தான்...

மறக்க நினைக்கிறேன்
நாளை முதல் மறந்து விடுவேன் என்ற நாட்களின் எண்ணிக்கை மட்டுமே மறந்து வருகிறேன்

வயது வா வா சொல்கிறதே
எல்லாம் அழகு தான் அவள் பிறந்த வருடம் தெரியும் வரை

Wednesday, March 25, 2009

தோழி




சிறகுகள் களைந்தாய்
ஒளிவட்டம் தொலைத்தாய்
அமைதி மறந்தாய்
புன்னகை மறைத்தாய்
சினத்தால் சிதறடித்தாய் ( சில சமயம் :) )

கனவுகளை தோளில் சுமந்தபடி
எதையோ தேடி
எங்கோ தொலைந்த பலரை
நிழல்தனில் இருந்து நிஜத்திற்கு மீட்டு எடுத்த

இலக்கணம் மீறிய தேவதை இவள்...

Saturday, February 21, 2009

பார்த்து போன பார்வைகள் எல்லாம்......


நீ இல்லை
பரவாயில்லை

உன் வாசம்
உன் ஸ்பரிசம்
உன் பேச்சு
உன் புன்னகை
உன் கண்ணீர்
உன் கண்கள்
அனைத்தும் இனி நான் காண இல்லை

இப்படி
அனைத்தையும் பறித்து சென்றாய்

பரவாயில்லை

ஆனால் ஏனடி
உன் நினைவுகளை மட்டும்
விட்டு சென்றாய்......

Tuesday, February 17, 2009

:) ராக்கியின் முன்தினம் :)


எப்போதும் போல்
இயல்பாய் தான் சொல்லி சென்றாள்
நாளை கண்டிப்பாய் வர வேண்டும் என்று

ஏனோ எனக்குள் சிறு நடுக்கம்.....

Wednesday, February 11, 2009

நிலவு தூங்கினாலும்...





இறந்த காலத்தின் சுவடுகள்
நிகழ் கால நிஜங்களோடு பிரித்தறியா வண்ணம் புணர்ந்த படி

படர்ந்திடும் பனி துளியை ரசிக்கும் நேரம்
படர்ந்து விடும் உன்னை ரசித்த நினைவுகள்

ஜன்னல் திரை விலக்கி நிலவொளியில் கலந்திட நினைக்கையில்
தேய்பிறை கூட அழகாய் தெரிந்த நாட்களின் ஞாபகங்கள்

மனதை வருடியபடி மெல்லிசை நடை பழக
மனமோ என்றோ நீ ரசித்த ஒற்றை வரியில் மரணித்தபடி

அறையில் இருளாய் நிறைந்த தனிமை விலங்கு
உன் நினைவு ஆயுதம் ஏந்தியது புன்னகை தின்ற படி

அன்று பேச படாமல் அர்த்தம் இழந்த வார்த்தைகள்
இன்று மொழி இழந்து செவிகளில் மௌனங்களாய் அலறிய படி

சிதறி விழுந்த கவிதை அரக்கனால்
கற்பிழந்த காகிதங்களின் மௌன விசும்பல்கள்

இவற்றின் மத்தியில்

வினா தெரியா விடைகளை இறைத்தபடி
நிஜங்களையும் நினைவினையும் நிலவொளியில் கரைத்த படி
நான்

ஒவ்வொரு இரவும் இப்படி தான் தொடங்குகிறது

பார்க்கும் கேட்க்கும் படிக்கும்
என அனைத்திலும் நீ தெரிவது போல் ஒரு மாயை

உன் நினைவு பிடிக்குள் என் தனிமை
தனிமை இழந்து தவிக்குதடி

நிஜங்கள் இருளில் கரைந்தபடி
நினைவுகள் கனவுகளாய் உரு மாறிட

நீள்கிறது இரவின் பயணம்...

ஒவ்வொரு கனவின் தோன்றல் மரித்தலின் இடையில்
நான் நானாய் மாறி உறங்கிட

மெல்ல விடிகிறது பொழுது
இன்றும் அவள் இல்லாத தனிமையினை தாங்கியபடி.....

Tuesday, February 10, 2009

காதலாய் ஒரு காமம்....


காதலா காமமா
நம் இருவருக்கு இடையில்
கேட்டு விட்டாள் தோழி ஒருத்தி

ஊரில் உள்ள எனக்கு தெரிந்த
அனைத்து கெட்ட வார்த்தையிலும்
திட்டி விட்டேன் உன்னை

உன்னை எதற்கா?
கட்டுக்குள் அடங்கா கைகளுக்கும் கள்ள உதடுகளுக்கும்
சொந்தக்காரன் நீ தானே

மெல்ல சுயம் வந்து
காரணம் வினவினேன் ஏன் என்று

இடை பற்றிய உன் விரல்
இதழ் தீண்டிய உன் உதடுகள்
காற்றுக்கு கூட கருணை காட்டாத
உன் நெருக்கம்
தலையணையாய் மாறி போன என் மடி

இப்படி தொடர்ந்தாள்
என் நாணங்களை சீண்டிய படி

பாவி உனக்கென்ன வெட்கம் கெட்டவன்
இங்கு நான் அல்லவா தேள் கொட்டிய திருடியாய்....

அவளது புன்னகை அலறியது
என்னை வெற்றி கொண்டதாய்

'இந்த காயம் ஞாபகம் இருக்கா'
எதிர் கேள்வி கேட்டேன்

புரியா பார்வையை பதிலாய் வீசினாள்

பெருமையும் காதலுமாய்...
தொடர்ந்தேன்

நீ இழுக்க உடைந்த வளையல்
உரசி சென்ற தடத்தை
நாணம் மட்டும் இன்றி ரத்தமும் சிவபேற்ற

உன் கண்ணில் தெரிந்த
உயிர் பிரியும் வேதனையை
கன்னம் நனைத்த கண்ணீர் துளியினை...

Sunday, February 8, 2009

சில ஜிமெயில் சிதறல்கள்....

என்னோட ஜிமெயில்-அ பழைய mails பார்த்துட்டு இருந்தேன். அதுல கிடைத்த சில இவை. எனக்கு மிகவும் பிடித்தவை


இப்போ இந்த படம். எல்லாருக்கும் தெரியும், வள்ளுவர். கன்னியாகுமரில வானத்திற்கு தமிழ் பால் புகட்டி கொண்டு இருக்கும் சிலை. இந்த படம் சமிபத்துல தோழி ஒருத்தி அனுப்பி வெச்சது. இந்த படத்துல அவரு நிக்குற ஸ்டைலில் சிறிது நளினம் இருபதாய் தோன்றியது. இது அந்த கால தோரணையா இல்லை காரணம் என்னவோ தெரிந்தவர் கூறலாம்


Friday, February 6, 2009

tO mY frIenD....

5 விரலில் ஒன்றில் மட்டும் மோதிரம் போட்டாச்சு :) :) :)


நான் இல்லாமல் உன் கல்யாணமா
எத்தனை முறை சொல்லி இருப்பேன்
இதோ இன்று அதே நான் இல்லாமல் தான்
இனிதே நடந்தேறியது உன் திருமணம்

தோழி

வாடும் முன் பார்த்து விடு
பூத்து இருக்கும் என் வாழ்த்துகளை
missed call வடிவில் உன் தொலைபேசியில்...


bACk tO sQuaRE oNE aTLaST :D
இன்று தொடங்கும் இந்த பந்தம் என்றும் இனித்திட என் வாழ்த்துக்கள்

Wednesday, January 28, 2009

நீ...


இரவின் தனிமையில்
உடைக்கப்படாத மௌனங்களில்
எழுதப்படாத என் கவிதைகளில்

நீ


நூறு கோடி வார்த்தைகள்
நீ இல்லாததால்
மௌனங்களாய் கரைகின்றது


Saturday, January 24, 2009

நினைவுகள்

கடந்து வந்த நிஜங்கள் எல்லாம் நினைவுகளாய் மாறும் நேரம் நிஜத்தில் தொடர்ந்த நபர்களும் இடங்களும் மறைந்து போக வாய்ப்பு உண்டு. அப்படி பட்ட நாட்களில் அந்த சுகமான சந்தோஷமான நினைவுகள் கூட மனதை சிறிது உரசி பார்ப்பது உண்டு.

வெள்ளை தேசத்தில் நான்கு சுவர்களுக்கு நடுவில் உறக்கம் கலைந்த ஒரு இரவில் மனம் போன போக்கில் எழுத பட்ட சில வரிகள் தான் இவை. கிறுக்கல்கள் என்றே சொல்லலாம்.... ஏனோ எனக்கு பிடித்து போனது... மனதின் ஓரத்தில் உறங்காமல் உரசிடும் சில நினைவுகளும் தனிமையும்... அவை தரும் பல அர்த்தமற்ற புன்னகைகளும் சில சோகங்களும்....

.....

என் அறைகளின் சுவர்களில் மோதி மோதி எதிரொலிக்கிறது
என் மௌனங்கள் மிக சத்தமாய்

என்னை சுற்றிலும் என் தனிமை
என்னுடன் மௌன மொழி பேசி கொண்டு...

கடந்த கால இனிமையான நிஜங்கள் எல்லாம்
நிழல்களாய் நினைவுகளாய் இங்கு விரிந்து நிற்கின்றன

நீ தேவதை தான் சந்தேகம் இன்றி
ஆனால் தேவதை நிழல் மட்டும் நிறம் மாறிடுமோ

உன் நினைவுகள் இன்று மாமிச பட்சியாய் மாறி
என் தனிமை தின்று சிரிக்கிறது

என் தனிமையில் எவர்க்கும் அனுமதி இல்லை தான்
அனுமதி கேட்டா நுழைந்தன உன் நினைவுகள்....

.....

நன்றி நிலாவன், காயத்ரி, தேவா உங்களது முந்தைய கருத்துகளுக்கு....

Tuesday, January 20, 2009

உன்னை பிடித்து விடுவதற்கு....

தனிமையின் இருள் சூழ்ந்த இரவுகளில்
மௌன மொழி மட்டுமே சப்தித்த வேளையில்
எங்கோ விழி நிறுத்தி சுயம் இழந்திருக்க

ஓர் குறுந்தகவலில் தனிமை கிழித்து
'என்ன செய்கிறாய்' என கேட்டாயா

உன்னை பிடித்து விடுவதற்கு....

Monday, January 19, 2009

...

தொட்டில் கண்டதில்லை
தொட்டியில் கண்டெடுக்கபட்டோம்

பிறந்தது முதல் கண்ணீர் மட்டுமே சொந்தமாய் கொண்டோம்

மறந்து விட நினைகிறேன்
என்ன செய்வது
பள்ளி முதல் சுடுகாடு வரை உங்கள் பெயர் கேட்கிறானே

உங்கள் ஒரு நாள் நாடகத்தால்
இங்கு வாழ் நாள் முழுவதும்
முகவரி இழந்தேன்

சிந்தனை சிறகுகள்
விரிய நினைக்கையில்
அனாதை என்ற ஒற்றை சொல்லால்
சிறகொடிக்க படுகின்றோம்

ஊர் அறிய கதறினேன்
இறைவனின் குழந்தை என
உலகம் நாத்திகமாய் மாறியது அறியாமல்

இறைவனின் படைப்பு புத்தகத்தில்
முன்னுரை இல்லாமல் எழுதப்பட்ட
இலக்கியங்கள் நாங்கள்

ஏனோ
முன்னுரை இல்லாத ஓர் குறையால்
முடிவுரை இன்றி தவிக்கிறோம்

இனி ஒரு விதி செய்வோம்
முதல் எழுத்து இல்லா சமுதாயம் படைதிடுவோம்

- இரா.மோகன்

லேசர் பார்வை

பெண்

முதல் முதலாய்...