Thursday, August 6, 2009

யாரும் அறியாமல்
மனதின் அடர்ந்த மூலையில்
சேர்த்து வருகிறான்
அனைவருக்குமான சொற்களை

சிறகடிக்கும் பட்டாம்பூச்சியில்
மனதை சிதறடித்தபடி
மெல்லிசை அருந்தி
நினைவுகளில் தொலைந்திருந்தான்
நீ எதிர்படும் வரை

உனக்கான சொற்களை
அனைவருகுமானதில் இருந்து பிரித்தெடுத்து
உனக்கான முகமுடியை அணிந்து
இதழ் ஓரத்தில் காத்திருந்தான்
சந்தர்பங்கள் எதிர்நோக்கி

அமைந்திடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
தவறாமல் எடுதெரிந்தான்...
உடைந்து உருகியது
உன்னுள் இருக்கும் நானாகிய பிம்பமும்
என்னுள் இருக்கும் நீயாகிய பிம்பமும்

திரும்பி நடந்தேன்.
உடல் நீங்கிய நிழலாய் தொலைந்து அலைந்தன...
நமக்குள் நமக்கென இருந்த நேசங்கள்

நம் இதழ் ஓரத்தில் சிரித்தன
இரண்டு மன சாத்தான்கள்