Monday, November 23, 2009

என் கவிதை எனபடுவது யாதெனில்...

உறக்கம் களைந்த ஒரு பின்னிரவில்
என் வெறுமையினை பங்கிட்ட வேளையில்
உன்னை என் கனவுகள் என்றேன்

ஆம் என்றாய்

அவளின் மேல் கொண்ட காதலில்
பின் அவள் பரிசளித்த பிரிவிலும்
உன்னை என் காதலி என்றேன்

ஆம் என்றாய்

தெளிந்த நீரோடையாய் மனம்
தெளிந்து அடங்கிய பொழுதுகளில்
உன்னை என் கவிதை என்றேன்

ஆம் என்றாய்

தொடக்கத்தின் முதல் படியில் முடிந்து விடும்
அர்த்தமற்ற உறவுகள் தரும் நினைவுகளில்
நீ எனது சிறு புன்னகை என்றேன்

ஆம் என்றாய்

இனி தோழியினை நீ என்பதா நீங்கள் என்பதா
என்ற கெட்டி மேளத்தையும் தாண்டிய பட்டி மன்றத்தில்
உன்னை என் தோழி என்றேன்

ஆம் என்றாய்

எண்ணங்களின் முரண்களில் சிக்கி
சிதறிய வார்த்தைகளை கோர்த்த பொழுதுகளில்
உன்னை கிறுக்கல் என்றேன்

ஆம் என்றாய்

ஓயாமல் கதறும் தனிமையினில் இருந்து
என்னை மீட்டு எடுத்த நேரங்களில்
உன்னை தேவதை என்றேன்

ஆம் என்றாய்

மன சலனங்கள் அடங்கிய வேளையில்
மௌனங்களோடு உரையாட தொடங்கிய பொழுதுகளில்
உன்னை என் மன கண்ணாடி என்றேன்

மௌனமாய் சிரித்தாய்

5 comments:

  1. ரொம்ப அருமையா இருக்கு

    ReplyDelete
  2. கவிதைக்கே கவிதை அஹ...
    really superb...

    ReplyDelete
  3. அழகுக்கே அழகா
    கவிதைக்கே கவிதை அஹ...
    really superb...

    ReplyDelete