Tuesday, December 1, 2009

ஒரு தெய்வம் தந்த பூவே...


குழந்தையின் சிரிப்பில் மட்டுமே
தோற்று போகிறேன்

விடிந்தது முதல்
சுமந்து கொண்டு திரிகிறேன்
அனைவருக்குமான முகமுடிகளை

கோவம் தெறித்த படி ஒன்று
காதல் பொழிந்த படி ஒன்று
கண்ணீரோடு ஒன்று
வெறுப்பு உமிழ்ந்த படி ஒன்று
மௌனம் சுமந்து ஒன்று

இப்படி சில இருந்தாலும்

அநேகம் சிரிப்பினை சுமந்த படியே...

தெருவில் எதிர்படும்
முகம் தெரியாதவைக்கு என்று சில

அலுவலக சகாக்களுக்கு என்று சில

புண்படுத்திய மனங்களை
மன்னிபதற்கு என்று சில

புண் பட்ட மனங்களுக்கு
ஆறுதலாய் சில

என

அநேகம் சிரிப்பினை சுமந்த படியே...

கொஞ்ச காலமாய்
குழந்தையின் சிரிப்பில் மட்டுமே
முகமுடிகள் தேடி தோற்று போகிறேன்

9 comments:

  1. நன்றி வானம்பாடிகள், கனிமொழி

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  3. நன்றி S.A. நவாஸுதீன்

    ReplyDelete
  4. எந்த முகமூடியும் இல்லாமல் விஷயத்தை சரியாக சொல்லி இருக்கீங்க. அருமை.

    ReplyDelete