Tuesday, August 3, 2010

கனவில் தொலைத்த நிஜங்கள்

அன்று இரவு கனவினில் நீ வந்தாய்
காதல் கொண்டாய்
என்னை உன் கனவுக்கு அழைத்து சென்றாய்

உன் கனவு உலகத்தின்
அழகிய நல்லவைகளை எடுத்து
நம் கனவு உலகம் படைத்தோம்
நம் உலகில் சென்று காதல் கொண்டோம்
காதல் செய்தோம்

நாட்கள் வருடங்களாய் உருள
மெல்ல கனவுகள் இடம் பெயர தொடங்கியது

யாரோ நம் உலகத்தை மாற்றி அமைப்பதை உணர்ந்தோம்

மூன்றாம் கனவின் எதோ ஒரு புள்ளி
நமது நிஜத்தோடு உறவாடியதில்
என்னுள் உள்ள உன் நினைவும்
உன்னுள் இருந்த என் நினைவும்
பாம்பு உருவம் கொண்டு நம் உலகம் புகுந்ததாய் அறிந்தோம்

அவற்றில் இருந்து தப்பிப்பதற்கு
தினம் வெகு தூரம் வெகு திசையில்
ஓட தொடங்கினோம்

துவண்டு விழுந்த ஒரு நாளில்
மெல்ல அது என் உடல் கிழித்து வெளி வந்து
என்னோடு புணர தொடங்கியது
புணர்தலின் உச்சத்தில்
பாம்பின் மேல் காதல் கொள்ள துவங்கினேன்
காதல் தொடங்கிய நொடியில்
மீண்டும் என் உடல் நுழைந்து மறைந்தது

ஒரு புன்னகையோடும்
நீல வண்ண உடலோடும்
உன்னை தேடினேன்

ஒரு புன்னகையோடும்
நீல வண்ண உடலோடும்
என்னை தேடினாய்

மீண்டும் சந்தித்த நொடியில்
உன்னை நானும்
என்னை நீயும்
கொலை செய்ய துவங்கினோம்

1 comment: